நம் சம்பளத்தை வைத்து, மாதம் முழுக்க உள்ள செலவுகளைச் சந்திக்க வேண்டும் என்பது, கடினமே. அதே போல் தான், நேரமும். நமக்கிருக்கும் நேரத்தில், வீட்டுக்கு அடிக்கடி வரும் விருந்தினர்களை வர வேண்டாம் என்று சொல்வதும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.
இதற்குச் சிறந்த வழி, அடிக்கடி, “போன்’ பேசுவதைத் தவிர்ப்பதே. யோசித்துப் பாருங்கள்! நீங்கள் பேசும் 90 சதவீத, “போன்’கள், வெறும் உபசரிப்பு வார்த்தைகளாகவே இருக்கும். “என்னடி பண்றே… இன்னிக்கு என்ன, “டிரெஸ்’ போட்டிருக்கே… என்ன சமையல்? டிபனுக்கு? உங்கம்மாவோட பேசினியா? சாரு வரேன்னு சொன்னாளே… வந்தாளா? எப்படி இருக்காளாம்?
அவ குழந்தை சவுக்கியமா…’ இப்படி தான் தினமும் பேச்சு போகிறது. உங்கள் நண்பிகளுடன், அரட்டை அடிக்க வேண்டியது தான்; நாள் முழுதும் பரபரவென வேலை செய்யும்போது, கொஞ்சம், “ரிலாக்ஸ்’ செய்து கொள்ள, இந்த, “போன்கால்’கள் உதவும். ஆனால், அதுவே உங்கள் நேரத்தை விழுங்கும் அளவு சென்று விடுவதை நீங்கள் கவனித்திருக்கவே மாட்டீர்கள்? “என்ன விஷயம்? டாக்டரிடம் போனியா? மருந்து சாப்பிட்டீயா? ஓகே… நாளைக்கு பேசலாம்’ – இது போதும் ஒருவரை விசாரிக்க! முயன்று பாருங்களேன்!
.......................நன்றி..............................
02 பன்றிக் காய்ச்சல் வராமல் தவிர்ப்பது எப்படி?
இன்ப்ளுயென்சா என்றழைக்கப்படுவது சாதாரண குளிர் காய்ச்சல் தான். வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய் இது. ஒவ்வொரு ஆண்டும் இது ஏற்பட்டாலும், ஆண்டுக்கு ஆண்டு சற்றே வித்தியாசப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று, அதிக வீரியம் அடைகிறது.
அப்போது வேகமாகப் பரவி, உலகளவில் தொற்று ஏற்பட்டு, அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த ஆண்டு, எச்1என்1 வைரஸ் தொற்று ஏற்பட்டதே; அது, இது போல் உருவானது தான்.
பறவைகள், பன்றிகளிடம் தோன்றிய இந்த தொற்று, ஒன்று என்ற நிலையிலிருந்து, அதிவேகமாகப் பரவும் தொற்றாக, எட்டாம் நிலைக்கு முன்னேறி விட்டது என, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டம் பரவும் அதிதீவிரமான வைரசாக இது உருமாறி விட்டது என, இந்த மையம் அறிவித்தது. இந்த மையம் அச்சம் கொண்டதற்கேற்ப, எச்1என்1 வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது. தொற்று பரவும் பூகோள அமைப்பின் மையப் பகுதியில் இந்தியா உள்ளது. எனவே, இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்த தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. பன்றிக் கறி சாப்பிட்டாலோ, பன்றிகளைத் தொடுவதன் மூலமோ இந்த நோய் வருவது இல்லை.
* நோயாளிகளை பார்த்த உடன், கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பணத்தை கையாண்ட பிறகு, ஒவ்வொரு முறையும் கை கழுவ வேண்டும்.
* கதவின் கைப்பிடிகளை, கிருமிநாசினி மூலம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். * வெளியில் செல்லும் போது, முகமூடி அணிய வேண்டும்.
* இருமல், தும்மல் ஏற்படும் போது, கைக்குட்டையால் மூக்கை, வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
* வெளியிடங்களில் எச்சில் துப்புவதை அறவே தவிர்க்க வேண்டும். எச்1என்1 வைரஸ் நோய் தடுப்பு மருந்து உள்ளது. ஊசி வகை, மூக்கில் ஸ்பிரே போட்டுக் கொள்ளும் வகை ஆகியன உள்ளன. 2 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு, மூக்கு வழியே ஸ்பிரே செய்யலாம். 6 மாதக் குழந்தைகளுக்கு ஊசி மருந்தே போட வேண்டும். இரண்டுமே, சிறந்த வகைகள் தான்.
மூக்கு வழியே போடப்படும் தடுப்பு மருந்தால், பயன்கள் அதிகம். மூக்கில் உள்ள சளியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகளும் அழிய வாய்ப்பு ஏற்படும். தடுப்பு மருந்து போட்டாலும், சிலருக்கு தொற்று ஏற்படலாம். ஆனால், அது குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்தும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த தொற்று, ஏப்ரல் மாதம் வரை தென்படும். எனவே, நோய் தடுப்பு மருந்து போட்டுக் கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
.......................நன்றி..............................
03 பூண்டை வேக வைத்து’ சாப்பிடுங்க!
பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.
வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும். சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள்.
வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம். வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும். பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் முன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.
.......................நன்றி..............................
04 சிரிப்பு ஒரு மாமருந்து
உலகில் பிற உயிரினங்களுக்கும் பசி உணர்ச்சிகளும் உயிரை தக்க வைத்திடும், மற்றும் உயிரைக் காப்பாற்றும் உணர்ச்சிகளும் மிகுந்து இருந்தாலும் மனித இனம் அதையும் மீறி பேசும் வல்லமை பாடும் வல்லமை, சிரித்திடும் கலையை அறிந்திருக்கிறான்.
சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. மேலும் 14 தசைகள் மட்டும் அச்சமயம் இயங்குகின்றன. பாரா சிம்பதடிக் நரம்புகள் ஆட்சி புரிகின்றன.கோபம் உச்சநிலை அடையும் சமயம் 100க்கும் மேற்பட்ட தசைகள், நாடி நரம்புகள் வேகம் கொண்டு சிம்பதடிக் நரம்புகள்(தானியங்கி) முறுக்கேறி அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது உடலில் இரத்தத்தில் அமிலம் மிகுகிறது.
எனவே நாம் வாழ்வில் நமது உணவின் அங்கம் போல் சிரிப்புக்கு, சிரிப்புக் கலையைக் கற்பதற்கு, கடைப்பிடிக்க சில நிமிடங்களாவது ஒதுக்கிடலாம்.
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். துன்பம் வரும் சமயமும் துவளாமல் சிரிப்புடன் எதிர் கொள்வது ஓர் அரிய கலை. அற்புதக் கலை.சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும். கவலை அலைகள் பிறரை நம்மிடம் இருந்து விரட்டும்.சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி பாஸிடிவ் கரண்ட்டை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி நெகடிவ் கரண்ட் தரும்.
இயற்கை உணவுகளும், கனி உணவுகளும் அப்பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டும். இயற்கை வாழ்வியல் வளமாக வழி நடத்திச் செல்லும். நாம் அதற்குத் தயாரா? சிரிக்கும்போது நைட்ரஜன் காற்று கூட நமக்கு சக்தி தரும். காற்றாக மாறும் வல்லமையைப் பெறுகிறோம். சிரித்துப் பழகுகிறவர்களுக்கு உணவின் தேவை குறைகிறது.
.......................நன்றி..............................
05 மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்
மனமே பொக்கிஷம் உங்களுக்குள் ஓர் தங்கச் சுரங்கம் , அற்புத பொக்கிஷம் புத்தாகு மருந்து , பார்த்த போதே பிணிகளைப் போக்கு மருந்து புத்தரருந்துமருந்து , அனு பான மும்தானம் பரம மருந்து. - வள்ளலார்
ஒரு காந்தம் ஏற்றப்பட்ட இருமபுத்துண்டு அதன் எடையை விட 12 மடங்கு கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகிறது. ஆனால் காந்தசக்தி இழந்த இரும்பால் பறவையின் சிறகு எடையைக் கூட தூக்க இயலாது.
கணிதி விதி: 2+2= 4 இரசாயன விதி : பி2+ளி = பி2ளி கணிதம், இரசாயனம், பௌதிகம் விதிகள் (Principles) கொள்கைகள் போல் அகமனதும் ஒருவித கோட்பாட்டில், கொள்கையில் மிக இயல்பாக தெளிவாக நேர்த்தியாக இனிமையாக வெளிப்பட்டு இயங்கும்.
தண்ணீர் உயரத்தில் இருந்து கீழே பாயும். வெப்பத்தால் கனிமப் பொருட்கள், திரவங்கள் விரிவடையும் இதுபொது விதி & எல்லா நாடுகளுக்கும், எல்லா இடத்திற்கும் ஏற்புடைய விதி அதைப்போல உங்கள் ஆழ்மனது அகமனது (Sub Conscious mind) பொக்கிஷத்தை திறக்க அற்புத மந்திர சாவி தியானம், ஜபம், பிரேயர் அல்லது நம்பிக்கை விதி (Law of Nature) (Law of faith) (Law of Life) இயற்கை விதி & வாழ்க்கை விதி உள்ளன.
நமது பிராண சக்தி, உள் ஒளி சக்தி, காந்த சக்தி அபரிதமாக ஜொலிக்க ஆரம்பிக்கிறது. எனவே வாழ்க்கை சூத்திரம் நம்பிக்கையில் தொடங்குகிறது. ஆழ்மனது வழி நடத்தும் சமயம் நாட்ம இயல்பாக, இனிமையாக, சுகமாக வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அதற்கான எளிய வழி தியானம், இயற்கை உணவுகள், இயற்கை சூழல் வாழ்வு. ‘அன்னை இலாச் சேய் போல் அலக்கண் உற்றேன் கண் ஆர என் அகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே. - தாயுமானவர்
......................நன்றி..............................




