
செய்தி சேகரிக்கச் சென்ற தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் உயர்கல்வி அமைச்சகத்துக்கு முன், பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்கியர்களை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை வைத்திருந்தனர்.
No comments:
Post a Comment